பிரிவின் குளிர் நாவு உச்சரிக்கையில்
என் பாடலின் இறுதிவரி நடுங்குகிறது
றெக்கை முளைக்கும் உனது
அவநம்பிக்கையின் கண்ணாடித் தூசுகளால்
விழி நெய்த பருவங்களின்
மெல்லாடை கந்தலாகிறது
தாமதித்தது நியாயமற்றதெனினும் உன்
அர்ப்பணிப்பின் ரேகைகள்
என் தூரம் வரையில்
நீளவேயில்லை எந்நாளிலும்
மனமோய்ந்து
அடர்ந்த வார்த்தைக் கூட்டமாகிறேன்
என்னிலிருந்தே உருவுகிறாய் குறுவாளொன்றை
பின்னர் முன்னறியாத வரியொன்றிலிருந்து
உனது காதல் என்னிடம் சொல்கிறது
நான் மூன்றாமவனாகிவிட்டேன் என்பதை
என் பாடலின் இறுதிவரி நடுங்குகிறது
றெக்கை முளைக்கும் உனது
அவநம்பிக்கையின் கண்ணாடித் தூசுகளால்
விழி நெய்த பருவங்களின்
மெல்லாடை கந்தலாகிறது
தாமதித்தது நியாயமற்றதெனினும் உன்
அர்ப்பணிப்பின் ரேகைகள்
என் தூரம் வரையில்
நீளவேயில்லை எந்நாளிலும்
மனமோய்ந்து
அடர்ந்த வார்த்தைக் கூட்டமாகிறேன்
என்னிலிருந்தே உருவுகிறாய் குறுவாளொன்றை
பின்னர் முன்னறியாத வரியொன்றிலிருந்து
உனது காதல் என்னிடம் சொல்கிறது
நான் மூன்றாமவனாகிவிட்டேன் என்பதை