யுகம்யுகமாய் வெய்யில் படிந்துவிட்ட சுவர்கள்
மழையிறங்க ரகஸ்யமாய்ப் புகைகின்றன
உன் நினைவுகள் போல
கண்ணாடி சன்னலில் வழியும் சாரலென நீ
எனக்குள் இறங்கத் தொடங்கிய நாட்களின்
பழுப்புநிற பிம்பங்கள் தேடியலைகிறது மனது
உடையும் மேகங்கள் விழும்
வெளிச்சங்கள் திருடப்பட்ட என் சாலையில்
ஒற்றை மெழுகுவர்த்தியுடன் வருவாய்
விடியும் காலையில் வாசலில் பொறுக்குவேன்
நீ உடைத்தெறிந்த முந்தைய நாள் நிலவை
புழுக்கம் கசக்கிய இரவொன்றில்
புவிஈர்ப்பு நியதிகளை உடைத்து
திசைகள் தீர்மானிக்கப்படாத பயணமாய்
மழையை அழைத்து வருவதாகவே சென்றாய்
இப்போதும் ஏதேதோ நிலையங்களில்
விரித்த குடையோடு கருங்கல் இருக்கைகளில் காத்திருக்கிறேன்
தொலைவில் அரூபமாய் நெளிந்து வருகிறது
நகருக்கும் நகருக்கும் மத்தியிலான உலகில்
கூரை தலையுரச நாம் ஸ்பரிசித்துக் கிடந்த
மழையில் நனைந்த அந்த ரயில்.
மழையிறங்க ரகஸ்யமாய்ப் புகைகின்றன
உன் நினைவுகள் போல
கண்ணாடி சன்னலில் வழியும் சாரலென நீ
எனக்குள் இறங்கத் தொடங்கிய நாட்களின்
பழுப்புநிற பிம்பங்கள் தேடியலைகிறது மனது
உடையும் மேகங்கள் விழும்
வெளிச்சங்கள் திருடப்பட்ட என் சாலையில்
ஒற்றை மெழுகுவர்த்தியுடன் வருவாய்
விடியும் காலையில் வாசலில் பொறுக்குவேன்
நீ உடைத்தெறிந்த முந்தைய நாள் நிலவை
புழுக்கம் கசக்கிய இரவொன்றில்
புவிஈர்ப்பு நியதிகளை உடைத்து
திசைகள் தீர்மானிக்கப்படாத பயணமாய்
மழையை அழைத்து வருவதாகவே சென்றாய்
இப்போதும் ஏதேதோ நிலையங்களில்
விரித்த குடையோடு கருங்கல் இருக்கைகளில் காத்திருக்கிறேன்
தொலைவில் அரூபமாய் நெளிந்து வருகிறது
நகருக்கும் நகருக்கும் மத்தியிலான உலகில்
கூரை தலையுரச நாம் ஸ்பரிசித்துக் கிடந்த
மழையில் நனைந்த அந்த ரயில்.
4 கருத்துகள்:
Romba azagaana kavithai....liked very much... :))
//உடையும் மேகங்கள் விழும்
வெளிச்சங்கள் திருடப்பட்ட என் சாலையில்
ஒற்றை மெழுகுவர்த்தியுடன் வருவாய்
விடியும் காலையில் வாசலில் பொறுக்குவேன்
நீ உடைத்தெறிந்த முந்தைய நாள் நிலவை//
Especially these lines..!! :))
Sorry tamil-la comment poda mudiyala :(
நன்றி ஸ்ரீ..தொடர்ந்து வலைப்பூ பக்கம் வரவும்..
மனதைக் கவர்ந்த மழைப்பொழுதுக் கவிதையொன்று.மழையில் நனைந்த ரயிலின் அனுபவம் எல்லோர்க்கும் இருக்கும் போலிருக்கிறது. கவிதை அருமை.
////மனதைக் கவர்ந்த மழைப்பொழுதுக் கவிதையொன்று.மழையில் நனைந்த ரயிலின் அனுபவம் எல்லோர்க்கும் இருக்கும் போலிருக்கிறது. கவிதை அருமை.////
நன்றி ரிஷான்..நீங்கள் சொன்னது போலவே word verification'ஐ நீக்கிவிட்டேன்..
அனுபவத்தின் தடத்தில் தானே கவிதை பயணிக்க முடியும்?இல்லையா..
கருத்துரையிடுக