மிக நேர்த்தியான சித்திரம் போல
மனவெளிகளில் மிதக்கிறது புராதன நகரமொன்று
கோட்டுச் சித்திரங்களினாலான மண்டபத்து அறைகளில்
உன் தைலங்களின் நறுமணத்தை பரவ விடுகிறாய்
கற்றூண்களின் முதுகுகளுக்குப் பின்னால்
ஒளிந்து கொள்கிறேன்
தேடி அணைத்துப் பருகுகிறாய்
உன்னில் பாதி வயதேயான
என் பால்யத்தை
மதில்களையும் தாண்டி பிரவாகமாகிறது
நட்சத்திரங்களை உருக்கிய நதி
களைந்தவைகளுக்கு காவல் வைத்த என் பற்றிய
பிரக்ஞையற்று அதில் குளிக்கிறாய்
நதிவடிய மேலேறி வரும் மேனிபட்டுத்
தெறிக்கும் கிரணங்களில் கண்கள் நடுங்குகின்றன
கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்
ஆறுதலாய்
குவிந்த சிப்பி போன்ற வெண்மார்புகளை
பந்துகளாக்கி விளையாட கொடுக்கிறாய்
என் பால்யத்தின் கடைசி நாட்களில்.
மனவெளிகளில் மிதக்கிறது புராதன நகரமொன்று
கோட்டுச் சித்திரங்களினாலான மண்டபத்து அறைகளில்
உன் தைலங்களின் நறுமணத்தை பரவ விடுகிறாய்
கற்றூண்களின் முதுகுகளுக்குப் பின்னால்
ஒளிந்து கொள்கிறேன்
தேடி அணைத்துப் பருகுகிறாய்
உன்னில் பாதி வயதேயான
என் பால்யத்தை
மதில்களையும் தாண்டி பிரவாகமாகிறது
நட்சத்திரங்களை உருக்கிய நதி
களைந்தவைகளுக்கு காவல் வைத்த என் பற்றிய
பிரக்ஞையற்று அதில் குளிக்கிறாய்
நதிவடிய மேலேறி வரும் மேனிபட்டுத்
தெறிக்கும் கிரணங்களில் கண்கள் நடுங்குகின்றன
கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்
ஆறுதலாய்
குவிந்த சிப்பி போன்ற வெண்மார்புகளை
பந்துகளாக்கி விளையாட கொடுக்கிறாய்
என் பால்யத்தின் கடைசி நாட்களில்.
7 கருத்துகள்:
ஸ்ரீராம்.. அசத்துறீங்களே.. என்ன ஒரு கவிதை..
ரொம்ப அருமை..
உங்களையும் என் பக்கத்தில் குறித்து கொள்கிறேன்..
//கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்//
கிரேட்.. சான்ஸே இல்லை..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்..தொடர்ந்து உங்களின் எண்ணங்களை பதிவு செய்யவும்..
கவிதைகளில் அவ்வளவு தேர்வுள்ளவனாகவில்லாதபடியால்.. மையக்கருத்து பிடிபடவில்லை... ஆனால், உங்கள் கவிதை அப்படியே காட்சிப்படுத்தி என் கற்பனைகளை நிரப்பிக் கொண்டது.. மிக நேர்த்தியான வரிகள்... கலக்குங்க :))
/// ஜி கூறியது...
கவிதைகளில் அவ்வளவு தேர்வுள்ளவனாகவில்லாதபடியால்.. மையக்கருத்து பிடிபடவில்லை... ஆனால், உங்கள் கவிதை அப்படியே காட்சிப்படுத்தி என் கற்பனைகளை நிரப்பிக் கொண்டது.. மிக நேர்த்தியான வரிகள்... கலக்குங்க :))///
நன்றி ஜி..உங்கள் கருத்து உற்சாகமூட்டுகிறது..
/// Saravana Kumar MSK கூறியது...
ஸ்ரீராம்.. அசத்துறீங்களே.. என்ன ஒரு கவிதை..
ரொம்ப அருமை..
உங்களையும் என் பக்கத்தில் குறித்து கொள்கிறேன்..///
உங்கள் பக்கத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி..
\\\\\ Saravana Kumar MSK கூறியது...
//கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்//
கிரேட்.. சான்ஸே இல்லை.. \\\\
அய்யய்யோ..எத்தன பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி????
கற்பனை குதிரையை தட்டி விட்டேன் :).. என்னனமோ புரியுது.. பின்றேள் போங்கோ :)
கருத்துரையிடுக