வியாழன், 4 டிசம்பர், 2008

அவளின் கனவுரு


உயிர்ப் புள்ளியினின்று நீண்ட கோடுகள்
வளர்த்த ஓவியக் கானகத்துள்
நானென்பது சிறைபட அவள் சிரிக்கிறாள்
இடம் வலமாய்க் கடக்கும் அவளின் கனவுரு
ஞாபகமேட்டின் உச்சியில்
எனக்கொரு சிலுவையை நிறுவியிருக்கிறது
திரண்ட மேகங்களுக்கிடையில் சாய்ந்த ஒளி
ஸ்பெக்ட்ரமின் ஏழு வண்ணங்களாய் அசைந்து
எழுதத் தூண்டிய அவளது நினைவுகள்
கூடவே
கவிதை கற்பனித்த கனவும்
திடுமென குவிந்த இரவின் பிடிக்குள்
கருப்பு வெள்ளையானதில்
இவ்வரிகளென சரிகிறது மிச்சப்பிரதி
.

3 கருத்துகள்:

MSK / Saravana சொன்னது…

அட்டகாசம் ஸ்ரீராம்..

//கருப்பு வெள்ளையானதில்
இவ்வரிகளென சரிகிறது மிச்சப்பிரதி.//

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

நன்றி சரவணா..தொடர்ந்த உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்..

MSK / Saravana சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..