திங்கள், 22 செப்டம்பர், 2008

கவிதை 1


பகாப்பத முத்தமொன்றிலிருந்து
உன் உதடுகளைப்
பிரித்தெடுத்துப் போனாய்
கிழிந்த என் பாதி
முத்தத்தின் சிறகுகள் உறைந்து
அந்தரத்தில் மிதக்கும்
மழையற்ற ஒற்றை மேகமாகிறது
துக்கத்தின் குறியீடாய்
மேகப் படலுக்கு அப்பால்
மெலிந்த நிலவின் வெண்முகம்
நட்சத்திர விடைகள் வேண்டி
உலர்ந்த வானில்
ஓங்காரமிடும் கேள்விகளை எறிகிறேன்
நம்பும் படியே நீ
திரும்பி வந்து கொண்டிருப்பதாய்
அசரீரி என்றும் போலவே
இன்றையக் கனவிலும்

கருத்துகள் இல்லை: